மூவேளைச் செபம்

மூவேளைச் செபம்:

ஆண்டவருடைய தூதர் மரியாளுக்கு தூதுரைத்தார்
அவளும் பரிசுத்த ஆவியினால் கருத்தரித்தார் – அருள் நிறை

இதோ ஆண்டவருடைய அடிமை
உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும் – அருள் நிறை

வார்த்தை மனுவுருவானார்
நம்மிடையே குடிகொண்டார் – அருள் நிறை

இயேசுகிறிஸ்துநாதருடைய வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாகும்படியாக
– இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக

இறைவா ! தேவ தூதர் அறிவித்தபடியே உம்முடைய திருமகன் இயேசுகிறிஸ்து மனிதனானதை நாங்கள் அறிந்துள்ளோம். அவருடைய பாடுகளினாலும், சிலுவையினாலும் நாங்கள் அவருடைய உயிர்ப்பின் மேன்மையை அடையும் பொருட்டு எங்கள் உள்ளங்களில் உமது அருளைப் பொழிய வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய அதே இயேசுகிறிஸ்துவழியாக மன்றாடுகிறோம் – ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top